
இசைஞானி இளையராஜா தேனீயில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துக் கொடுத்து இருக்கிறார். இளையராஜா பெயருடன் இருக்கும் மின்விளக்கு கோபுர கல்வெட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையிலகில் அறிமுகமான இசை மேதை இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.
தற்போது பல படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா அரசியலிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். தனது சொந்த மாவட்டமான தேனீயில் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைத்திருக்கிறார் இளையராஜா. நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இந்த மின்விளக்கு கோபுரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், மின்விளக்கு வைக்கப்பட்டது குறித்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. எம்.பி. பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினார். இதனையடுத்து இளையராஜாவை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியது. எம்.பி. ஆனதும் இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. மத்திய அரசு அவருக்கு கௌரவம் செய்துவரும் நிலையில் அவரும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.