
"செம்பருத்தி" திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, அண்மையில் ஒரு பேட்டியில் இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "ஒரு பாடலுக்கு மெட்டமைக்கவே பல நாட்கள் ஆகும் சூழலில், செம்பருத்தி படத்தின் ஒன்பது பாடல்களுக்கான சூழலையும் நான் அவரிடம் விளக்கினேன். நான் விளக்கி முடித்த அடுத்த 45 நிமிடங்களில், ஒன்பது பாடல்களையும் அவர் மெட்டமைத்து என்னிடம் தந்துவிட்டார்," என அவர் மெய்சிலிர்க்கக் கூறுகிறார். உலக இசை வரலாற்றில், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை தரமான பாடல்கள் உருவானது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.