
இனி வரும் காலங்களில் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
வேலைக்காரன் படபிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.
அதில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், மக்கள் அனைவரும் குடும்பத்தோடு பாதுகாப்பாக பட்டாசு வெடித்து இந்த வருட தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுங்கள்.
பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரையில் படபிடிப்பு நடைபெறுகிறது.
இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
விரைவில் நயன்தாராவுடன் இவர் இணைந்து நடித்த வேலைக்காரன் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.