
அன்புச்செழியனின் பணத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் அப்படி ஏமாத்தினா எனக்கு நைட்ல தூக்கம் வராது எனவும் தயாரிப்பாளரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன்தான் எனவும் அவர் கொடுக்கும் கந்துவட்டி டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்து விட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் திரண்டு பேட்டியளித்தனர். கந்துவட்டியை ஒழிக்கவேண்டும் என கூக்குரலிட்டனர்.
இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்குகள் பதியபட்டுள்ளன.இதைதொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். அதனால் அவர் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அசோக்குமாரின் தற்கொலைக்கு நீதி வேண்டும் எனவும் அன்புச்செழியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோபபட்டார்.
ஆனால் விஷாலுக்கு திரையுலகினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது. காரணம் விஷால் அன்பு செழியனிடம் கடன் வாங்கியிருப்பதாகவும் அதை தட்டி கழிக்கவே விஷால் இவ்வாறு பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், செய்தியாளருக்கு பேட்டியளித்த விஷால் அன்புச்செழியனின் பணத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் அப்படி ஏமாத்தினா எனக்கு நைட்ல தூக்கம் வராது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.