“உங்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் வரப்போகுது”... வனிதாவுக்கு சவால் விட்ட நாஞ்சில் விஜயன்... காரணம் என்ன?

By Kanimozhi PannerselvamFirst Published Aug 4, 2020, 7:54 PM IST
Highlights

ஆனால் இதை மறுத்துள்ள நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு சவால் விடும் விதமாக ட்வீட் செய்துள்ளார். 

வனிதா - பீட்டர் பால் 3வது திருமண விவகாரம் பலருக்கும் பேசு பொருளாக மாறிவிட்டது. அதிலும் சம்பந்தமே இல்லாத பலரும் கருத்து கூற ஆரம்பித்தது வனிதாவை கடுப்பேற்றியது. இதனால் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதாக கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி மற்றும் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது வனிதா போலீசில் புகார் கொடுத்தார். அதுமட்டுனின்றி ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என சோசியல் மீடியாவிலும் அவர்களை நாறுநாறாக கிழித்தெடுத்தார். 

இந்த பிரச்சனையில் சம்மனே இல்லாமல் ஆஜரான நாஞ்சில் விஜயன் வனிதா அக்கா ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என கண்ணீர் விட்டு கதறும் அளவிற்கு செய்தார். முதலில் பூனை போல் சாந்தமாக இருந்த நாஞ்சில் விஜயன் இடையில் புலியாக மாறி வனிதா பற்றிய சில விஷயங்களை சோசியல் மீடியாவில் கசியவிட்டார்.

ஆனால் சூர்யா தேவி கைதுக்கு பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பித்த நாஞ்சில் விஜயன், தனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக வனிதாவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இதுகுறித்து வனிதா தனது ட்விட்டரில், நாஞ்சில் விஜயன் என்னை அழைத்திருந்தார். முதலில் இருந்து நடந்த அனைத்தைப் பற்றியும் அவர் கூறினார். அவரை நான் சந்தித்தது கூட இல்லை என்பதால் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது, அதனால் எங்களுக்கு நடுவில் எந்த பிரச்சனையும் இல்லை. இத்தனை குழப்பத்திற்கு சூர்யா தேவி தான் காரணம் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கஸ்தூரி, அவரை தேவையில்லாமல் பிரச்சனையில் கொண்டு வந்துவிட்டார். அவருடைய சேனலில் வேண்டுமென்றே பேசவைத்துள்ளார்.

நடுவில் இருக்கும் சிலரால் நாஞ்சில் விஜயன் திசை திருப்பப்பட்டதாக  கூறும் வனிதா,  அவரது மன்னிப்பை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஏனென்றால் அவர் தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு இளம் டேலண்ட். அவரது வளர்ச்சியை அது பாதிக்கும். அவர் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரை பற்றி குறை கூறுயதற்காக நான் வருத்தப்படுகிறேன் என பெரிய மனதுடன் பதிவிட்டிருந்தார். 

ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்க்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டாள் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள் ...
Am not asking apologize to u pic.twitter.com/BYaNn1wxvo

— Nanjilvijayan (@Nanjilvijayan1)

இதையும் படிங்க: இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

ஆனால் இதை மறுத்துள்ள நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு சவால் விடும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதில், சில பிரச்சனைகளை பேசி புரிய வைக்க முயன்றால், அதை நான் மன்னிப்பு கேட்டதாக நீங்களே நினைத்து கொள்வீர்களா?. பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

click me!