கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு..! நடிகை கொடுத்த புகாரால் சீரியல் நடிகர் அதிரடி கைது!

By manimegalai aFirst Published Jul 15, 2021, 4:24 PM IST
Highlights

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர், அம்பிலி. இவர் தன்னுடைய இரண்டாவது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும், இதனால் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக கூறியதை தொடர்ந்து, இவரது இரண்டாவது கணவரும், சீரியல் நடிகருமான ஆதித்யன் ஜெயின்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர், அம்பிலி. இவர் தன்னுடைய இரண்டாவது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும், இதனால் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக கூறியதை தொடர்ந்து, இவரது இரண்டாவது கணவரும், சீரியல் நடிகருமான ஆதித்யன் ஜெயின்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை அம்பிலி... தன்னுடன் சீரியல்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், லோவலை என்கிறவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவரும் கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிறந்தனர். இதை தொடர்ந்து சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயின் என்பவரை அமபிலி 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மேலும் ஆதித்யன் ஜெயின் ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும், விவாகரத்து பெற கூறி கொடுமை படுத்துவதாக போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து, போலீசார்... ஆதித்யன் ஜெயின்னை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

ஆதித்யன் ஜெயின் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றவர். அம்பிலியை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.....................................................................

click me!