மாணவி அனிதாவின் உடலுக்கு முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்திய ஜி.வி.பிரகாஷ் !!  வேதனை அளிப்பதாக உருக்கம் !!!

 
Published : Sep 02, 2017, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
மாணவி அனிதாவின் உடலுக்கு முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்திய ஜி.வி.பிரகாஷ் !!  வேதனை அளிப்பதாக உருக்கம் !!!

சுருக்கம்

g.v.prakash paid homege anitha in ariyalur

நீட் தேர்வு பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மரியாதை செலுத்தினார்.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகினரும் அனிதாவின் மரணத்துக்கு இரங்கலும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அனிதாவின் தந்தையைப் பார்த்து, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், மத்திய பாடத் திட்டத்தில் உள்ள தேர்வை எழுத முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!
பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி