ஆனி முடிஞ்சு, ஆடி முடிஞ்சு, ஆவணி வந்தா…. – விரைவில் களவாணி - 2 உருவாக்கம்…

 
Published : Sep 02, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
ஆனி முடிஞ்சு, ஆடி முடிஞ்சு, ஆவணி வந்தா…. – விரைவில் களவாணி - 2 உருவாக்கம்…

சுருக்கம்

kalavan - 2 making starts soon

விமல் - ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாம்.

‘களவாணி’ என்ற படத்தை ஏழு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சற்குணம் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் ‘பசங்க’ படத்தில் அறிமுகமான விமலை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர்.

இந்தப் படத்தின் மூலம்தான் நடிகை ஓவியா நாயகியாக அறிமுகமானார்.

முதன் முறையாக தஞ்சை பகுதி மண்வாசனை கதையாக வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இப்படத்தில் விமலுடன் ஓவியா, சூரி, சரண்யா, இளரவசு, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தார்,

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறதாம்.

விமலுடன் சூரி, கஞ்சா கருப்பும் மீண்டும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குனர் சற்குணம் இயக்குகிறார்.

இந்த தகவலை விமல் தனது பிறந்த நாளில் வெளியிட்டார்.

தற்போது விமல் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து வருகிறார். இதனை பூபதி பாண்டியன் இயக்குகிறார். இது விரைவில் வெளிவர இருக்கிறது என்பது கொசுறு தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?