"என்னை பிடிக்குமா என கேட்ட காயூ... மொக்கை பண்ணிய ஓவியா...

First Published Aug 5, 2017, 4:04 PM IST
Highlights
gayatri and oviya coemdy speech


இரவு முழுக்க யாரையும் தூங்க விடாமல் காதல் பைத்தியமாக திரிந்து கொண்டிருந்த ஓவியா காலை எழுந்தவுடன் முற்றிலும் மற்றொரு ஓவியாவாக அனைவருக்கும் தெரிந்தார்.

எந்த ஜூலியை திட்டினாரோ அவர் மீது தீடீர் என பாச மழையை பொழிந்தார். பின் அனைவரிடமும் சகஜமாகவும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனக்கு கோபப்படுபவர்களை மிகவும் பிடிக்கும் என ஓவியா கூறினார்.

அதனை கேட்ட காயத்ரி அப்போ என்னை மிகவும் பிடிக்குமா என ஓவியவிடம் கேட்க, எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டால் பிடிக்காது, நியாயமான விஷயங்களுக்கு கோபப்பட்டால் பிடிக்கும் என கூறி காயத்ரிக்கு செம மொக்கை கொடுத்தார்.

click me!