இந்நிலையில் சுரேஷ் சந்திராவும், நாசரும் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வீட்டில் வளர்த்து வந்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் மேனேஜர் வீட்டில் பாம்பு வளர்த்து வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நடிகர் அஜித் என்றாலே தமிழகத்தில் இளைஞர்களுக்கு அளப்பரிய பிரியம் உண்டு , ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடிப்பு ஆற்றலால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் நடிகர் அஜித் . அவர் ஒன்றைச் சொன்னால் அதை தலைமேல் ஏற்று செய்யக்கூடிய ரசிகர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் உள்ளனர்.
அப்படிபட்ட நடிகரின் மேலாளராக இருப்பவர் செய்துள்ள செயலால் திரையுலகில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தல அஜித் குமாரின் மேலாளராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா , அவரது உதவியாளர் நாசர் , இவர்கள் திரைப்படங்களுக்கு பிஆர்ஓக்களாக இருந்து வருகினர், அதேபோல் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் எனப்படும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் ஈவென்ட் மானேஸ்மென்ட் நடத்தி வருகின்றனர். காட்டு விலங்குகளை வீட்டில் வளர்ப்பது கூடாது என சட்டம் நிலுவையில் இருந்து வருகிறது . இந்நிலையில் சுரேஷ் சந்திராவும், நாசரும் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வீட்டில் வளர்த்து வந்துள்ளனர்.
அதற்கு உணவாக எலியை வழங்கி வந்துள்ளனர். இந்த விஷயம் மெல்ல வெளியில் கசிய ஆரம்பித்தது , அது வனத்துறை அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியது உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து அவர்கள் வளர்த்து வந்த மலைப்பாம்பை கைப்பற்றியுள்ளனர் . அத்துடன் அவர்கள் மீது வனவிலங்கு சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் இதுகுறித்த தகவல்களை உறுதிசெய்யப்படவில்லை .