பிரபாகரன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்திய பாபி சிம்ஹா... குவியும் பாராட்டுக்கள்...

Published : Nov 26, 2018, 09:57 AM ISTUpdated : Nov 26, 2018, 09:58 AM IST
பிரபாகரன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்திய பாபி சிம்ஹா... குவியும் பாராட்டுக்கள்...

சுருக்கம்

‘சீறும் புலி’ என்ற பெயரில் எடுக்கப்படும் மாவீரன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா எப்படி செட் ஆவார் என்ற தமிழீழ ஆதரவாளர்களின் சந்தேகத்துக்கு, படத்தின் முதல் பார்வை மூலம் சந்தோஷமான பதிலை அளித்திருக்கிறார் பட இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார்.

‘சீறும் புலி’ என்ற பெயரில் எடுக்கப்படும் மாவீரன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா எப்படி செட் ஆவார் என்ற தமிழீழ ஆதரவாளர்களின் சந்தேகத்துக்கு, படத்தின் முதல் பார்வை மூலம் சந்தோஷமான பதிலை அளித்திருக்கிறார் பட இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, அவரது வாழ்க்கை வரலாற்றை செல்லுலாய்டில் பதிவு செய்யும் துணிச்சல் முயற்சியான ‘சீறும் புலி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் அருகே நிற்கும் ஒரு புலியின் பிடறியில் கைவைத்தபடி கம்பீரமாக, ஏறத்தாழ பிரபாகரனை நினைவுக்குக் கொண்டுவரும் நெருக்கத்துடன் அமர்ந்திருக்கிறார் பாபி சிம்ஹா.

இன்று காலை முதலே வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த முதல் பார்வை போஸ்டரால் தமிழீழ ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மக்கள் தலைவனின் எழுச்சி. வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!