
சுபாஷினி பாலசுப்பிரமணியம், 36 வயதான இவர் சென்னை போரூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இலங்கையில் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிப்பின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தற்கொலை செய்துள்ளார் சுபாஷினி.