விளையாடி கொண்டிருந்த போது மாரடைப்பு..! பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Sep 18, 2020, 10:45 AM IST
Highlights

சீரியல் நடிகர் சபரிநாத், தன்னுடைய நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீர் என நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

சீரியல் நடிகர் சபரிநாத், தன்னுடைய நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீர் என நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்: வயசுக்கு மீறி கவர்ச்சி காட்டும் கிரண்..! அதுக்குன்னு இவ்வளவு மோசமா..? தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்!
 

43 வயதாகும் சபரிநாத், தன்னுடைய மனைவி, மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். மலையாளத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'Minnukettu' , Amala, மற்றும் Swami Ayyappan , ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது Padatha Painkili என்கிற புதிய தொடர் ஒன்றிலும் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார். நன்கு பயிற்சி பற்ற பேட்மின்டன் வீரரான இவர், அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் வியாழக்கிழமை மாலை விளையாடியுள்ளார்.

மேலும் செய்திகள்: எலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..!
 

அப்போது திடீர் என இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக கூறிய இவரை உடனடியாக, திருவனந்த புரத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மலையாள சின்னத்திரை  ரசிகர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

click me!