
கடந்த வருடம் சீரியல் மற்றும் ஒரு சில படங்களில், துணை நடிகையாக நடித்த சபர்ணா அவர் தனியாக வசித்து வந்த வீட்டில் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்தார்.
தற்போது இதே பாணியில் மேலும் ஒரு நடிகை இறந்து கிடந்துள்ளார்.
பிரபல மாடலும், ஒரு சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை கிருத்திகா சவுத்ரி. இவர் மும்பையில் அந்தோரி என்னும் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இவருடைய வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டியே கிடந்ததாக தெரிகிறது. இவர் அடிக்கடி படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு செல்வதால் இதனை அக்கம் பக்கத்தினர் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
தற்போது இவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது "கிருத்திகா சவுத்திரி" அழுகியநிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
மேலும் இவர் கொலை செய்யப்பட்டாரா...? அல்லது காதல் தோல்வி போன்ற விஷயங்களால் தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது வேறு ஏதாவது காரணமா என்கிற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.