"நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" என்ற வசனத்தை எழுதியவர் பாலகுமாரன்..!

 
Published : May 15, 2018, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
"நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி"  என்ற வசனத்தை எழுதியவர் பாலகுமாரன்..!

சுருக்கம்

familiar writer balakumaran passes away

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானதால் திரைத்துறையினர்  அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இவர், பல்வேறு விருதுகளை பெற்று  உள்ளார்.

இலக்கிய விருதுகள்

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)

இலக்கியச் சிந்தனை விருது - (மெர்க்குரிப் பூக்கள்)

தமிழ்நாட்டு மாநில விருது - (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

கலை - கலைமாமணி

மேலும் பல விருதுகளை பெற்றவர் இவர்.

கமல்ஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்சா, இயக்குனர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற ஊரில் பிறந்தவர் பாலகுமாரன்

ரஜினி நடித்த பாட்ஷா படத்தில், "நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன  மாதிரி" என்ற வசனத்தை எழுதியவர் இவர்தான்

இந்த வசனம் மூலம் ரஜினிகாந்தின் புகழ் மேலும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய இறப்பு திரை உலகினரை சோகத்தில் மூழ்க செய்து உள்ளது. இவருடைய இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்  பட்டு உள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!