
‘செவப்பா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான்’ என்ற நம்பிக்கையில் நேற்று முதல் கிளம்பிய ’எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி...எம்.ஆர். ராதா வேடத்தில் சிம்பு’ என்கிற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று மறுக்கிறார் ஒரு இயக்குநர்.
பழம்பெரும் நடிகரான எம்.ஆர். ராதாவின் பேரனான ஹக், ‘சங்கிலி புங்கிலி கதவைத் தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவர் தனது இரண்டாவது படமாக தனது தாத்தா எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப்போவதாகவும் அதற்காக அவர் சம்பந்தமாக எழுதப்பட்ட நூல்களை தீவிரமாகப் படித்துக்கொண்டே திரைக்கதை அமைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.
ஹக் ஒரு பக்கம் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்க அத்திரைக்கதைக்கு கண், காது மூக்கு வைத்த சிலர், அப்படத்தில் எம்.ஜி. ஆர் பாத்திரமும் முக்கியத்துவம் பெறப்போவதாகவும் அந்த வேடத்தில் எம்.ஜி.ஆரைப்போலவே சிவப்பாக இருக்கிற அரவிந்தசாமி நடிக்கப்போவதாகவும் ராதாரவி வேடத்தில் வம்புத் தம்பி சிம்பு நடிக்கப்போவதாகவும் கிளப்பி விட்டிருந்தனர்.
இந்த சிவந்த வதந்தியை மேலும் பரவ விடாமல் உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்ட இயக்குநர் ஹக் ‘நான் எடுக்கவிருப்பது முழுக்க முழுக்க என் தாத்தாவின் கதையை மட்டும்தான். அடுத்து அதிகாரபூர்வமாக நான் அறிவிக்கும்வரை படம் குறித்து வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.