இந்து தீவிரவாத புகார்…  வரும் 22 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் மீது வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை !!

 
Published : Nov 05, 2017, 08:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
இந்து தீவிரவாத புகார்…  வரும் 22 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் மீது வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை !!

சுருக்கம்

enquiry at varanasi court against kamal hassan

இந்து தீவிரவாதம்  குறித்து நடிகர் கமலஹாசன் ஆன்ந்த விகடன் வாரப் பத்திரிகையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக  வாரணாசி நீதிமன்றத்தில் வரும் 22 ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

நடிகர் கமல் ஹாசன் ‘ஆனந்த விகடன்’ வாரபத்திரிகையில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார். அதில் இந்த வாரத்தில் குறிப்பிட்டுள்ளதில், “ இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது. இந்துவலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.  எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று அவர் எழுதியிருந்தார்.

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த இந்த கருத்துக்கு எதிராக கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வக்கீல், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு கொடுத்தார்.

அதில், கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

தனது மனு மீது வருகிற 22–ந் தேதி விசாரணை நடத்த நீதிமன்றம்  முடிவு செய்து இருப்பதாக கமலேஷ் சந்திர திரிபாதி தெரிவித்துள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!