ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது இயக்குநர் சசிகுமார் காவல் நிலையத்தில் புகார்...

 
Published : Nov 22, 2017, 09:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது இயக்குநர் சசிகுமார் காவல் நிலையத்தில் புகார்...

சுருக்கம்

Director Sasikumar complained to police about financier anbuchelian


இணை தயாரிப்பாளர் அஷோக் குமார் தற்கொலை தொடர்பாக  ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது இயக்குநர் சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அஷோக் குமார். இவர் இணை தயாரிப்பாளராகவும், சசிகுமார் பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார்.

இந்த நிலையில் அவர் சென்னை வளசரவாக்கத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், "பைனான்சியர் அன்புச் செழியன் மூலம் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானது" தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்துவட்டி கொடுமையால் அனாதையான குடும்பங்களில் அஷோக் குமாரின் குடும்பமும் சேர்ந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இனியாவது கந்துவட்டி கொடுமையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!