பின்வாங்க முடியாது..! 4 மாத உழைப்பு விஜயுடன் மோத தயாரான பெண் இயக்குனர்..!

By manimegalai aFirst Published Aug 18, 2018, 4:39 PM IST
Highlights

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக தயாரிக்கப்பட உள்ளது என்று என்றும், இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய், இயக்குவார் என்றும் மூன்று தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக தயாரிக்கப்பட உள்ளது என்று என்றும், இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய், இயக்குவார் என்றும் மூன்று தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 

மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் எடுக்க உள்ளதாகவும், ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நயன்தாரா, வித்யாபாலன், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளை பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்துள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது நடிகை வரலட்சுமியை வைத்து 'சக்தி' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஜெயலலிதா ஓர் இரும்பு பெண்மணி. அவரது வாழ்க்கை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவு எடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். நடிகர் தேர்வும் நடக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார்.

பட அறிவிப்பை வெளியிட தயாரான நிலையில் விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஆனால் நான் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதில் இருந்து பின் வாங்க மாட்டேன் எம தெரிவித்துள்ளார். 

click me!