
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக தயாரிக்கப்பட உள்ளது என்று என்றும், இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய், இயக்குவார் என்றும் மூன்று தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் எடுக்க உள்ளதாகவும், ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நயன்தாரா, வித்யாபாலன், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளை பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்துள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது நடிகை வரலட்சுமியை வைத்து 'சக்தி' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஜெயலலிதா ஓர் இரும்பு பெண்மணி. அவரது வாழ்க்கை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவு எடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். நடிகர் தேர்வும் நடக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார்.
பட அறிவிப்பை வெளியிட தயாரான நிலையில் விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஆனால் நான் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதில் இருந்து பின் வாங்க மாட்டேன் எம தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.