பா.ரஞ்சித் படத்தின் அடுத்த ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்..!

Published : Nov 13, 2019, 08:40 PM IST
பா.ரஞ்சித் படத்தின் அடுத்த ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்..!

சுருக்கம்

இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்குவதை காட்டிலும், தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தன்னுடைய நீலம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்குவதை காட்டிலும், தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தன்னுடைய நீலம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளிவந்த, 'பரியேறும் பெருமாள்' படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் நீலம் புரொடக்ஷன் சார்பில், 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை, இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டர்களில் ரித்விகா, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இந்த படத்தை பார்த்த அதிகாரிகள், படத்தின் கதையை வெகுவாக பாராட்டியதோடு, படத்திற்கு யூ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!