பா.ரஞ்சித் படத்தின் அடுத்த ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்..!

By manimegalai aFirst Published Nov 13, 2019, 8:40 PM IST
Highlights

இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்குவதை காட்டிலும், தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தன்னுடைய நீலம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்குவதை காட்டிலும், தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தன்னுடைய நீலம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளிவந்த, 'பரியேறும் பெருமாள்' படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் நீலம் புரொடக்ஷன் சார்பில், 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை, இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டர்களில் ரித்விகா, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இந்த படத்தை பார்த்த அதிகாரிகள், படத்தின் கதையை வெகுவாக பாராட்டியதோடு, படத்திற்கு யூ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Very happy to share the screens with and
Hearty wishes na♥️ & bro
darling & team 😊🤗 pic.twitter.com/YWg1nOfOyc

— Kumaran (@DirKumaran)

click me!