தேசிய விருது பெற்ற பழம் பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமானார்...!

 
Published : May 30, 2018, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
தேசிய விருது பெற்ற பழம் பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமானார்...!

சுருக்கம்

director muktha srinivasan death

பழம் பெரும் இயக்குனர், முக்தா சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று இரவு காலமானார். 88 வயதாகும் இயக்குனர் முக்தா சீனிவாசன், தஞ்சை மாவட்டத்தில் பிறந்து இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்தவர்.

இதுவரை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'இமயம்', 'கீழ்வானம் சிவக்கும்', ஜெயலலிதா நடித்த 'சூர்யகாந்தி', ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், கமல் நடித்த 'சிம்லா ஸ்பெஷல்' உள்ளிட்ட 65 படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் நடித்த 'முதலாளி' படத்தை இயக்கியதற்காக தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகர் கமலஹாசன் நடித்த 'நாயகன்' உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். 

வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் சில வருடங்களாக அவதி பட்டு வந்த இவர், நேற்று இரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவருடைய உடலுக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!