நெஞ்சு வலியால்... தனியாக காரில் போய் அட்மிட் ஆன கே.வி.ஆனந்த்! விவேக்கை தொடர்ந்து நெஞ்சை உலுக்கிய அடுத்த மரணம்!

By manimegalai aFirst Published Apr 30, 2021, 9:26 AM IST
Highlights

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.
 

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின் இயக்குனராக அவதாரம் எடுத்தவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக தமிழில் இயக்கினார்அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து அடுத்தடுத்து வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை இயக்கினார்.

கொரோனாவோ வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் யாரையும் தொந்தரவு செய்யாமல் காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

click me!