3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை; பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் திரையுலகம்!

Published : Dec 28, 2025, 10:11 PM IST
Director Bharathiraja Hospitalized Chennai Health Update Manoj Death Impact

சுருக்கம்

Director Bharathiraja Hospitalized Chennai Health Update : இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாசத்திற்குரிய பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மகன் மனோஜ் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். அவரது இறப்பு பாராதிராஜாவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது மட்டுமின்றி அவரை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியது.

அன்று முதல் சோர்வாக காணப்பட்ட பாரதிராஜா கடந்த ஒரு சில மாதங்களாக தனது மகளின் வீட்டில் இருந்து வந்துள்ளார். மலேசியாவில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிலிருந்து கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது வழக்கமான பரிசோதனை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரத்திலிருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்; பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்த பாதுகாவலர்; வைரலாகும் வீடியோ!
ஆளக் கடத்துவது, பொருளைக் கடத்துவது, இதைத் தவிர வேற கதையே கிடையாதா? 'கார்த்திகை தீபம்' சீரியலை விளாசும் ரசிகர்கள்!