’காமெடி நடிகர் குமரி முத்துவோட கல்லறையில அவரோட பிள்ளைங்க இப்பிடியாங்க எழுதிவைப்பாங்க?’...

By Muthurama LingamFirst Published Apr 4, 2019, 10:02 AM IST
Highlights

...இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மந்தவெளி சென்மேரிஸ் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றிருந்தேன், எப்போதும் இது மாதிரியான மயான பூமிக்குச் செல்லும் போது முன்பே சென்று விடுவேன், காரணம் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளைச் சுற்றிப் பார்க்க பிடிக்கும்.

இயக்குநர் மகேந்திரனின் நல்லடக்கத்தில் கலந்துகொண்ட இயக்குநர் அனீஸ் [திருமணம் என்னும் நிக்காஹ்,பகைவனுக்கு அருள்வாய்] தனது முகநூல் பக்கத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 2016 பிப்ரவரி 28 அன்று காலமான குமரிமுத்து, மகேந்திரன் படங்களில் அதிகம் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மந்தவெளி சென்மேரிஸ் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றிருந்தேன், எப்போதும் இது மாதிரியான மயான பூமிக்குச் செல்லும் போது முன்பே சென்று விடுவேன், காரணம் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளைச் சுற்றிப் பார்க்க பிடிக்கும்.

கலை,இலக்கிய, அரசியல் ஆளுமைகளின் கல்லறைகள் மற்றும் சில பழமையான கல்லறைகளையும் அதன் வாசகங்களையும் பார்ப்பேன்,அப்படி நான் சென்னை மற்றும் பாண்டிச்சேரி கல்லறைத்தோட்டங்களில் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், காயிதேமில்லத்,கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு, ‘படாபட்’ ஜெயலட்சுமி...எனத் தொடரும் அவ்வாறு நேற்றைக்கு நான் பார்த்த கல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் கல்லறையும் ஒன்று இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்து வின் கல்லறையை பார்த்ததும் வியப்பாக இருந்தது காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வேடங்கள் கொடுத்திருப்பார் எப்படி இருவரும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வியப்பான ஒற்றுமை தான் . 

குமரிமுத்து நாடகமேடைகள் மூலம் திரைக்கு நடிகராக வந்தவர். மாறுகண்களுடன் மிகவும் சாதாரணமான தோற்றத்துடன் இருப்பவர் போராடி திரையில் வளம் வந்த வெற்றியாளர்...ஆரம்பகாலத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகக்குழுவில் இருந்தாலும் நடிகர் சங்கத்தில் ராதாரவியுடன் முரண்பட்டு முதன் முதலில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையாக விமர்சனம் செய்தவர் அதனால் சங்கத்திலிருந்து நிரந்தர உறுப்பினர் பதவியிலிருந்து விளக்கப்பட்டவர், பின்னர் அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் . 

திமுக வின் நட்சத்திரப் பேச்சாளர், கிருத்துவ ஊழியர், என பல தளங்களில் பணியாற்றினாலும் மிக இயல்பான நடிப்பாற்றல் கொண்டவர் ...இவரின் சிரிப்பு பல தலைமுறைகளுக்கும் அடையாளம். குமரிமுத்துவின் கல்லறையைப்பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது Icon சிரிப்பை குறிப்பிட்டு “It is the time for the God ...to enjoy his laughter” ( எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு...ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க ) என்று அவரது கல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகள் அவர் மீது கொண்ட அன்புகலந்த கற்பனை திறனைக்கண்டு வியக்க வைத்தது.

 மேலும் இக்கல்லறை தோட்டத்தில் இன்னும் பல திரைத்துறையின் ஆளுமைகளும் ஒளிந்திருக்கலாம்...முடிந்து வெளியில் வரும் போது கல்லறைதோட்ட நுழைவாயிலின் அருகில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் இன்னும் வியப்பாக இருந்தது அதில் “ இக்கல்லறையில் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது, எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் அவர்கள் திரைப்படம் எடுக்க அனுமதிக்காத பூமியில் துகிழப் போவதை நினைத்து நகைமுரண்னுடன் வெளியே வந்தேன்.

click me!