தனுஷுடன் வில்லனாகும் மலையாள நடிகர்!

Published : Aug 09, 2019, 06:33 PM ISTUpdated : Aug 09, 2019, 06:44 PM IST
தனுஷுடன் வில்லனாகும் மலையாள நடிகர்!

சுருக்கம்

ஒவ்வொரு நாளும், நடிகர் தனுஷ் ரசிகர்களை குஷியாக்கு வகையில் ஏதேனும் ஒரு தகவல் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.  அந்த வகையில், நேற்றைய தினம் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படம் அக்டோபர் 4 ஆம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  

 ஒவ்வொரு நாளும், நடிகர் தனுஷ் ரசிகர்களை குஷியாக்கு வகையில் ஏதேனும் ஒரு தகவல் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.  அந்த வகையில், நேற்றைய தினம் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படம் அக்டோபர் 4 ஆம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள,  படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.  

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 'பேட்ட' படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதை உறுதி செய்தார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் என்கிற மலையாள நடிகர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் மூலம் ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக தமிழில் அறிமுகமாக உள்ளார். தமிழில் வில்லனாக அறிமுகமான பல மலையாள நடிகர்கள், முன்னை குணச்சித்திர நடிகர்களாக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!