தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், முக்கிய நபரை இழந்து நிலை குலைந்த தனுஷ்...!

 
Published : May 24, 2018, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், முக்கிய நபரை இழந்து நிலை குலைந்த தனுஷ்...!

சுருக்கம்

dhanush fans death in thoothukudy police attack

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், இதுவரை பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த போராட்டத்தில் ஏற்கனவே, கோலிவுட் திரையுலகின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவரான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர் இறந்தார். 

இந்நிலையில் தற்போது இதே போராட்டத்தில், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளில், ஒருவர் இறந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஈடு செய்யமுடியாத ரசிகரின் இழப்பு குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது....

துப்பாக்கி சூட்டில், என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!