'தேவர்மகன்' படத்தில் கௌதமி கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்...! வருத்தத்தோடு கூறிய பிரபல நடிகை..!

 
Published : May 27, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
'தேவர்மகன்' படத்தில் கௌதமி கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்...! வருத்தத்தோடு கூறிய பிரபல நடிகை..!

சுருக்கம்

devarmagan filck first got the chance to act aishwarya

1992 ஆம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமலஹாசன், ரேவதி, கௌதமி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'தேவர்மகன்'. 

இந்த திரைப்படம், இப்போதும் பல ரசிகர்களால் ரசிக்க கூடிய திரைப்படமாக இருந்து வருகிறது. மேலும் இந்தியத் தேசிய திரைப்பட விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்றது. அதேபோல் இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பல விருதுகளையும் வாரிக்குவித்த இந்த படத்தில் சக்திவேல்லாக நடித்த, கமலஹாசனுக்கு காதலியாக நடித்திருந்தவர் நடிகை கௌதமி. 

உண்மை காதலர்கள் போலவே மிகவும் எதார்த்தமாக இவர்களுடைய நடிப்பு அமைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிப்பதாகவும் ஒரு சில கிசுகிசுக்கள் எழுந்தது. 

தற்போது இந்த படத்தில் கௌதமி நடிக்க இருந்த காதப்பாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லைங்க... பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா தானாம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக நாயகியை மாற்றிவிட்டார்களாம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ்நாடே அலற போகுது; வரலாறு படைக்க வருகிறான் – அனல் தெறிக்கும் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் புரோமோ!
'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!