நல்ல காற்றை சுவாசிக்க போராடிய மக்களின், மூச்சுக்காற்றை நிறுத்தியது மிகப்பெரிய கொடுமை; நடிகர் சூரி ஆதங்கம்

Asianet News Tamil  
Published : May 27, 2018, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
நல்ல காற்றை சுவாசிக்க போராடிய மக்களின், மூச்சுக்காற்றை நிறுத்தியது மிகப்பெரிய கொடுமை; நடிகர் சூரி ஆதங்கம்

சுருக்கம்

Tamil comedy actor worried for the people assassinated in pearl city

தமிழ் திரையுலகில் தற்போது தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருக்கும் காமெடி  நடிகர்களில் சூரியும் ஒருவர். சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துயர சம்பவம் அனைத்து தமிழர்களையுமே மனதளவில் மிகுந்த வேதனை அடைய செய்திருக்கிறது.

நடிகர் சூரியும் கூட இந்த சம்பவத்தால் மிகவும் ஆத்திரமடைந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது பேசுகையில், இந்த கோர சம்பவம் குறித்து தனது மனவருத்தத்தை தெரிவித்திருந்தார் அவர்

அப்போது ”சில ஆண்டுகளுக்கு முன் தங்கள் உரிமைக்காக போராடிய தமிழர்களை, பக்கத்து நாடான இலங்கை அரசு கொன்று குவித்தது. பக்கத்து நாடு என்பதால் அப்போது நம்மால்  எதுவும் செய்ய முடியவில்லை.”

இப்போது நம்மண்ணிலேயே  நமது தமிழ் மக்கள்  சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் என்ன சாதிச்சண்டை, மதச்சண்டை என்று நாட்டிற்கு விரோதமாகவா போராடினார்கள் ? சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று தானே போராடினார்கள். இருபது வருடங்களாக நல்ல மூச்சுக்காற்றை சுவாசிக்க போராடிய மக்களின் மூச்சுக்காற்றை நிறுத்தியது, மிகப்பெரிய கொடுமை என வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் நடிகர் சூரி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!