தீபிகா - ரன்வீர் காஸ்ட்லி திருமணம்..! தாலி மட்டும் இத்தனை லட்சமா?

By manimegalai aFirst Published Nov 15, 2018, 12:43 PM IST
Highlights

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோனே  மற்றும் ரன்வீர் சிங். தொடர்ந்து நான்கிற்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. 
 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோனே  மற்றும் ரன்வீர் சிங். தொடர்ந்து நான்கிற்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. 

இதனை உறுதி செய்யும் விதத்தில், தீபிகா - ரன்வீர் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் சுற்றுவது. மற்றும் பட விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டு தங்களுடைய காதலை உறுதி செய்தனர். 

பின் காதல் குறித்து வெளிப்படையாக  கூறி திருமணத்தை உறுதி செய்தனர்.  இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம்  இத்தாலியில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று இத்தாலியின் லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணம் கொங்கனி சடங்கு முறைப்படி மந்திரங்கள் முழங்க நடந்தது.

இவர்களின் திருமணத்தில் 30 முதல் 40 விருந்தினர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களான  நடிகர் ஷாரூக்கான்,  இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் பரா கான் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். 

மற்றவர்கள், நவம்பர் 21-ஆம் தேதி பெங்களூரிலும், 28-ஆம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை பாலிவுட் திரையுலகில் நடைபெற்றுள்ள திருமணங்களில்  இவர்களின் திருமண பட்ஜெட்தான் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றாப்போல் தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம், இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பரிய முறைப்படி நடக்கவிருக்கிறது.

இவர்களுடைய திருமணத்திற்கு வருபவர்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருந்தது. அதாவது தீப்வீர் ஜோடி திருமண இடத்தில் மொபைல்போன் உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்த விதிமுறை. அதுமட்டுமின்றி ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் அங்கு வந்திருப்பவர்கள் முழுக்க முழுக்க இவர்களோடு ஒன்றிணைந்து கொண்டாடவேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறையை அறிவித்துள்ளார்கள்.

தீபிகா - ரன்வீர் திருமண ஆடையை பிரத்தியேகமாக வடிவமைத்தவர்,  சபியாசச்சி முகர்ஜி. இதில் தீபிகாவின் ஆடை மட்டும் 60 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், தீப்வீர் ஜோடி கைப்பட எழுதிய குறுஞ்செய்தியைக் கொடுத்திருக்கின்றனர்.

மணமேடையை அலங்கரிக்க, Florence நகரத்திலிருந்து 12 பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவிற்கு பிடித்த மலரான லில்லி மலர்களைக்கொண்டே மேடையை அலங்கரித்திருந்தனர். இன்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட இவர்களை உலக ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!