கொரோனா கட்டுப்பாடு... திரையரங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு..! திருப்பூர் சுப்ரமணியன் தகவல்..!

Published : Apr 20, 2021, 04:50 PM ISTUpdated : Apr 20, 2021, 04:51 PM IST
கொரோனா கட்டுப்பாடு... திரையரங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு..! திருப்பூர் சுப்ரமணியன் தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. எனவே இனி, காலை, மாலை, இரவு என மூன்று முறை மட்டுமே படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. எனவே இனி, காலை, மாலை, இரவு என மூன்று முறை மட்டுமே படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வேகமாக பரவி வருவதால்... திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க பட்டு வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. இரவு நேர  ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வர உள்ளதால், திரையரங்குகளில் படம் திரையிடப்படும் நேரம் மாற்ற பட்டு, இரவு காட்சியை 8 மணிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், புதிய ஆட்சி அமைந்தவுடன் திரையரங்குகளுக்கான புதிய கோரிக்கைகள் கேட்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே... கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் தன்னுடைய கொடூர முகத்தை காட்ட துவங்கிய கொரோனாவால், சுமார் 8 மதத்திற்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கினாலும், கொரோனா அச்சம் காரணமாக பலர், திரைப்படம் பார்க்க திரையரங்குகளுக்கு வரவில்லை. மாஸ்டர் படம், பொங்கலை முன்னிட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானாலும், பின்னர் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

எனவே மீதும், திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் திரையிட தயாரான நிலையில், கொரோனாவின் இடண்டாவது அலை மக்களை வாட்டி வதக்கி வருவதால், மீண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது இரவு நேர 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரவு நேர ஷோ திரையரங்குகளில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?