நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் அதிரடி வழக்கு பதிவு!

Published : Apr 20, 2021, 12:20 PM IST
நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் அதிரடி வழக்கு பதிவு!

சுருக்கம்

கொரோனா தடுப்பூசி குறித்து, அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா தடுப்பூசி குறித்து, அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக சுயநினைவின்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அதற்காக ஆஞ்சியோ அறுவைசிகிச்சையும் உடனடியாக செய்யப்பட்டது. 

24 மணி நேரம் கழித்தே எதையும் கூற முடியும், என மருத்துவர்கள் கெடு விதித்த நிலையில்...  17ஆம் தேதி காலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்த  தகவல் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிப்பைத் தாண்டி பல்வேறு சமூக அக்கறை கொண்ட பணிகள் மற்றும் இயற்கை ஆர்வலராகவும் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் விவேக். இவரின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி மக்கள் அனைவருக்குமே பேரிழப்பாக கருதப்படுகிறது.  

இந்நிலையில் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான, தடுப்பூசி போட்டுக் கொண்டார். எனவே இதன் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம், என்று சில வதந்திகள் பரவி வந்த நிலையில் விவேக்கின் மாரடைப்பிற்கும், தடுப்பூசிக்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தெளிவுபடுத்தினர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி தொடர்பாக சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். எனவே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர்அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூரலிகான் மீது வடபழனி காவல் துறையினரிடம் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்றைய தினம் முன்ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?