பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் காலமானார்!

 
Published : Nov 09, 2017, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் காலமானார்!

சுருக்கம்

cinematographer priyan death

கோலிவுட் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் ஒளிப்பதிவாளர் பிரியன்.

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான, பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பின் 1992 ஆம் ஆண்டு 'வா வா வசந்தமே' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் கொடுத்தார்.

இவரை பிரபல இயக்குனர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்று கூட  சொல்லலாம்... இதுவரை இயக்குனர்  ஹரி இயக்கி வெளிவந்த சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் 3 : 30 மணியளவில் இவருக்கு திடீர் என மாரடைப்பு காரணமாக  உயிர் பிரிந்ததாக இவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருடைய மரணம் குறித்து அறிந்த பல பிரபலங்கள் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!