
சினிமா துறையில் இருக்கும் 24 யூனியன்களில் முக்கியமானது டப்பிங் யூனியன். இதற்கான தேர்தல் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிலையில், அதில் பிரபல நடிகர் ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தலைவராக ராதாரவியும், பொதுச்செயலாளராக கதிரவன், பொருளாளராக சீனிவாசமூர்த்தி, ஆகியோர் உள்ளனர்.
Breaking: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த் - யோகி பாபு!
துணைத் தலைவராக கே மாலா, எம். ராஜேந்திரன், எம் நாராயணமூர்த்தி, இணைச் செயலாளரான டி.கோபி, துர்கா சுந்தரராஜன், குமரன், ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகர் தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் கட்டிடம், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகும், ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், இன்று சாலிகிராமம் 80-அடி சாலையில் உள்ள டப்பிங் யூனியன் வளாகத்தை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனை தடுக்க ராதாரவி எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போன நிலையில் இரவோடு இரவாக அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.