
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் திரைத்துறையினர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதாவது அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் இனி அனுமதி வாங்க நேரடியாக சென்று காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், இணையதளம் மூலம் அவர்கள் அனுமதி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே, இதுபோன்ற முறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய திரைத்துறையில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல் திரையுலகினர்களை அச்சுறுத்தி வரும் வீடியோ பைரசியை போன்றவற்றை தடுக்கும் சட்டமும் இயற்றப்படும் என புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.