விநாயகரைப் பற்றி பேசியதால் பாரதிராஜாவுக்கு வந்த வினை

 
Published : May 14, 2018, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
விநாயகரைப் பற்றி பேசியதால் பாரதிராஜாவுக்கு வந்த வினை

சுருக்கம்

case filed against famous Tamil director for his opinion against Hindu lord

இயக்குனர் இமயம் பாரதிராஜா சமீப காலமாக ,சமுதாய பிரச்சனை பலவற்றிற்கும் எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். போராட்டங்களிலும் கலந்துவருகிறார். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், இயக்குனர் பாரதிராஜாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தின் போது இவர் பேசிய விஷயத்தால் இப்போது இவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது. பாராதிராஜா போராட்டத்தின் போது பேசுகையில் விநாயகர் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர் என்றும், அவர் தமிழ் கடவுள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பாரதிராஜா தெரிவித்த இந்த கருத்து இந்துக்கடவுள்களை அவமானப்படுத்துவதாக உள்ளது, என கூறி இந்து மக்கள் முன்னணி கட்சியினர் இப்போது பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில்  வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்