"மீனம்பட்டி முதல் மும்பை வரை" ஸ்ரீதேவியை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்கள் மட்டும் இதை படிங்க...

First Published Feb 26, 2018, 3:36 PM IST
Highlights
biography of Legendary Actress Sridevi


ஸ்ரீ தேவி  பிறந்தது; ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர்  ஸ்ரீதேவி. சென்னை சட்டக் கல்லூரியில் படித்தபோது ராஜேஸ்வரியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஐயப்பன்.  பணி நிமித்தம் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் குடும்ப நிகழச்சி, ஊர்த் திருவிழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க மட்டுமே அவரது குடும்பத்தினர் சொந்த ஊரான மீனம்பட்டிக்கு வந்து சென்றுள்ளனர். சொந்த ஊரான மீனம்பட்டிக்கு வந்த ராஜேஸ்வரி 1963 ஆகஸ்ட் 13 ம் தேதி ஸ்ரீதேவியைப் பெற்றெடுத்தார். அவர் பிறந்த சில மாதங்களிலேயே ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் குழந்தையுடன் சென்னை திரும்பினர்.

சிறு வயது முதலே நாடகம், நடனம், பாடல் என பல்வேறு கலைகளில் ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, நான்கு வயதில் தனது சினிமா வாழ்கையை தொடக்கினார். சுறுசுறுப்பும், சக மனிதர்களுடன் இயல்பாக பழகும் ஆற்றலும் சிறு வயது முதலே அவரது பண்புகள் என்று பெருமை கொள்கிறார்கள் மீனம்பட்டி மக்கள்.

மீனம்பட்டி மக்கள் ஸ்ரீதேவியை அடிக்கடி நேரில் சந்தித்ததில்லை. ஆனால், எப்போதாவது வரும்பொழுது அவருடன் அனைவரும் மிகுந்த அன்புடனும் பழகியுள்ளனர். பல ஆண்டுகள் கழித்து பார்த்தால் கூட ஏற்கனவே பழகிய நினைவை சட்டென்று நினைவு கூர்ந்து பேசும் தன்மை கொண்டவர் ஸ்ரீதேவி. தனது இளம் வயதில் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் 1996ம் ஆண்டு தாய் ராஜேஸ்வரி புற்று நோயாலும் மரணமடைந்தனர்.  அதன் பிறகே ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டார்.

1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் போட்டியிட்டார் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். அப்போது, தனது தந்தையுடன் ஒரு வார காலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரீதேவி.

அதன்பிறகு, இதுவரை சொந்த ஊருக்கு நடிகை ஸ்ரீதேவி வரவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரது பெற்றோரின் இறப்புக்குப் பின்னர் வர இயலாத சூழ்நிலையால் நீண்ட நாட்களாக சொந்த ஊரையே பார்க்காமல் அவர் இறந்துவிட்டார்.

ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் அவரது உறவினர் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சதிஷ் மற்றும் ஆனந்தன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். சதிஷ் இறந்த விட்டார். தற்போது ஆனந்தன் மட்டும் சிவகாசியிலேயே வசித்து வருகிறார்.

அவரது தந்தையின் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியுடன் எவ்வித தொடர்பிலும் இல்லாமலே இருந்துள்ளனர். ஸ்ரீதேவி இந்த ஊரில் பிறந்திருந்தாலும்கூட ஊருக்கு வருவது, உறவினர்களை சந்திப்பது இல்லை. சிறு வயதில் திருவிழா, சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவரும், குடும்பத்தினரும் வருவர். 1989 சட்டமன்ற தேர்தலில் அவரது தந்தை போட்டியிட்ட போது ஒரு வார காலம் இங்கே தங்கியிருந்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தான் நாங்கள் அவரை பார்த்தது. 1990ல் அவரது தந்தை இறப்பிற்கு பிறகு வந்ததே இல்லை. அவர் வந்தால் தங்கும் வீட்டை ஆனந்தன் எனும் அவரது உறவினர் பராமரித்து வருகிறார்", என்கிறார்.

“ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு”

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

ஆரம்ப வாழ்க்கை:

ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது. ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது. பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான(கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை:

தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீதேவி,1967-ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’.ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.

இந்தி திரை உலகில் ஸ்ரீதேவி:

1978 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிஇந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரைப்படஉலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, அவருடைய “சத்மா” திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது.1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.பின்னர், “சாந்தினி” திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.

பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மூன்றாம் பிறை:

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படம், திரைப்பட உலகில் பல சாதனைகளைப்பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு:

போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 ஆம் அண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பத்மஸ்ரீ விருது:

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

விருதுகள்:

  • ‘பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • ‘பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்:

  • ‘நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.
  • “MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.
  • “வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர்  இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
  • ‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.
click me!