இந்த வீட்டுல கிசு கிசு பேசுறது ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு!! வெளியானது பிக்பாஸ் 5 புத்தம் புது புரோமோ!!

By manimegalai aFirst Published Sep 17, 2021, 8:01 PM IST
Highlights

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த புரோமோக்கள் வெளியாகி இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வரும் நிலையில், தற்போது கிசுகிசுவை வைத்தே... புதிய புரோமோ வெளியாகியுள்ளது.
 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த புரோமோக்கள் வெளியாகி இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வரும் நிலையில், தற்போது கிசுகிசுவை வைத்தே... புதிய புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நான்கு சீசன்களுக்கு இருந்ததை விட, 5 ஆவது சீசனுக்கான புரோமோக்கள் வேற லெவலுக்கு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் போட்டி போடும் விதமாக, சன் டிவி மாஸ்டர் செப் நிகழ்ச்சியையும், ஜீ தமிழ் சர்வைவர் என்கிற நிகழ்ச்சியையும் களமிறக்கியுள்ளதால், இம்முறை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி டிஆர்பி-யை பிடிக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தமாதம் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களை பிக்பாஸ் குழுவினர் ரகசியமாக தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அரசால் புரசலாக வெளியானாலும், இதுவரை... ஒருவர் கூட தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதை உறுதி செய்யவில்லை. அதற்க்கு முக்கிய காரணம், யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களோ அவர்கள் அதனை வெளிப்படுத்த கூடாது என்கிற நிபந்தனை உண்டு. அதனை மீறும் பட்சத்தில் அவர்களை நிகழ்ச்சியில் இருந்து நீக்கும் உரிமை தயாரிப்பு நிறுவனத்திற்கு உண்டு.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டது மட்டும் இன்றி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இரண்டு புரமோ வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹாய்யாக படுத்துக் கொண்டே கமல்ஹாசன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது யாரோ கிசுகிசுவென பேசுவது போலவும், உடனே அவர் ’யார் அது’ என்று கேட்டபோது பதில் வரவில்லை. மீண்டும் அதே குரல் கேட்டதை அடுத்து மீண்டும் பதில் வரவில்லை. இதனை அடுத்து இந்த வீட்டில் இனிமேல் கிசுகிசு பேச முடியாது என்று கமல் கூறும்போது அவருக்கே வார்னிங் கொடுக்கும் அளவுக்கு ஒரு குரல் கேட்கிறது. யாருமே கேட்கவில்லை என நினைத்து கிசுகிசு பேசினாலும் ஊரே கேட்கும் என்று கமலஹாசன் கூறுவதுடன் இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.


 

click me!