சூடு பிடிக்கும் பிக்பாஸ் போட்டி களம்..! பாலாவிற்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்..!

Published : Oct 23, 2020, 01:01 PM IST
சூடு பிடிக்கும் பிக்பாஸ் போட்டி களம்..! பாலாவிற்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்..!

சுருக்கம்

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்றைய தினத்தின் முதல் டாஸ்க்கே சற்று வித்தியாசமாக இருந்ததை நாம் பார்த்தோம். இது நாள் வரை, உள்ளே நடந்த சம்பவங்களை வைத்து, யார் அடுத்த வாரம் வெளியேறும் போட்டியாளர் என்பதை பிக்பாஸ் அவர்களேயே வரிசை படுத்த கூறினார்.  

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்றைய தினத்தின் முதல் டாஸ்க்கே சற்று வித்தியாசமாக இருந்ததை நாம் பார்த்தோம். இது நாள் வரை, உள்ளே நடந்த சம்பவங்களை வைத்து, யார் அடுத்த வாரம் வெளியேறும் போட்டியாளர் என்பதை பிக்பாஸ் அவர்களேயே வரிசை படுத்த கூறினார்.

இதை தொடர்ந்து இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நிஷா, சோம், அர்ச்சனா உள்ளிட்டோர் பாலா அதிக கோவப்படுவதாக கூறி அவரது பெயரை கூறுகிறார்கள். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலாவும் எழுந்து, கோவப்பட்டதான் மனுஷன் என்பது போல் டயலாக் எல்லாம் கூறுகிறார்.

பின்னர், பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து... பஞ்சாயத்து என்று வந்து விட்டால், நடுவர் வேலை பார்க்கும் அர்ச்சனா இந்த பிரச்னையிலும் தலையிட்டு தன்னுடைய நாட்டாமை தனத்தை காட்டுகிறார்.

இது ஏதோ டாஸ்க் போல் தெரிகிறது, காரணம் அர்ச்சனா மாஸ்க் போட்ட முகம் ஒருவருக்கு, மாஸ்க் போடாத முகம் மற்றொருவருக்கு என கூறும் போது நிஷா மற்றும் ரியோவின் முகங்கள் காட்டப்படுகிறது. இன்று என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ:

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!