சாப்பிட கூட சண்டை வாங்கும் மீரா! நாட்டாமை மது கொடுத்த முத்த தீர்ப்பு!

By manimegalai aFirst Published Jul 24, 2019, 2:15 PM IST
Highlights

ஒவ்வொரு நாளும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும் சம்பவங்களும் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கும், கடினமாகி கொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது நாட்டாமை டாஸ்க் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி கொண்டு இருக்கிறது.
 

ஒவ்வொரு நாளும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும் சம்பவங்களும் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கும், கடினமாகி கொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது நாட்டாமை டாஸ்க் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி கொண்டு இருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நாட்டாமையாக இருக்கும், மதுவை எதிர்க்கிறார். நேற்றைய தினம் வழிய போய் சேரனிடம் சண்டை வாங்கிய மீரா இன்று மதுமேல் குறி வைத்திருக்கிறார். ஆனால் ஏன் இந்த சண்டை வருகிறது என தெரியவில்லை.

இந்த ப்ரோமோவில், எப்படி நீங்க சோறு சாப்பிடிறீங்கன்னு நான் பார்த்துடறேன் என்று மீரா சொல்ல, 'அதற்கு மதிக்காதவளுக்கே இவ்வளவு ஆணவம் இருக்கும்போது ஊரையே மதிக்கிற எனக்கு எவ்வளவு ஆணவம் இருக்கும்' என்று மீரா கூறுகிறார்.

பின் நான் சொல்றேன் எல்லாரும் சாப்பிடலாம், நாட்டாமை கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு எல்லோரும் சாப்பிடலாம் என்று அபிராமியை பார்த்து மது கூறுகிறார்.  பின் சரவணன் நானும் ஆப்பிள் சாப்பிட போறேன் என மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மது, சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


 

click me!