இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?

By manimegalai aFirst Published Aug 17, 2019, 1:02 PM IST
Highlights

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒரு நபர் மக்கள் போடும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறி கொண்டு இருக்கிறார் என்பது நாம் அறிந்தது தான். 
 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒரு நபர் மக்கள் போடும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறி கொண்டு இருக்கிறார் என்பது நாம் அறிந்தது தான். 

அந்த வகையில் இதுவரை, பார்த்திமா பாபு, மோகன் வைத்யா,  மீராமிதுன், வனிதா, ரேஷ்மா, உள்ளிட்டோர் வெளியேறியுள்ளனர்.  கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு சாக்ஷி வெளியேறினார். அதே போல் மக்களின் ஆதரவு இருந்தும் ஒரு சில காரணங்களுக்காக, நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார்.  

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள நபர் நபர் யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. கடந்த வாரங்களில், மிகவும் நியாயமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், இந்த வாரம் முகேன் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று சேஃப் ஆகவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதே போல், லாஸ்லியாவை காப்பாற்றுவதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் அவருடைய ஆர்மி, கண்டிப்பாக இந்த வாரம் லாஸ்லியாவை வெளியேற விடாமல் காப்பாற்றி விடுவார்கள். கவினும் சில வாரங்களாக தன்னுடைய தவறுகளை உணர்ந்து விளையாடி வருவதால் அவரும் காப்பாற்ற பட வாய்ப்பு உள்ளது.

மீதம் உள்ளவர்கள் என்றால் அது மதுமிதா மற்றும் அபிராமி தான்.  இவர்கள் இருவரின்,  ஆண்கள் பெண்களை யூஸ் செய்து கொள்கிறார்கள் என, தன்னுடைய மனதில் பட்ட கருத்தை தைரியமாக கூறி, ஆதரவையும், விமர்சனங்களையும் பெற்றுள்ள மதுமிதா சேப் ஆகவும் வாய்ப்புள்ளது, வெளியேறவும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. அவரை தொடர்ந்து அபிராமி எப்போதும் சண்டை வாங்கி அழுது கொண்டு மட்டுமே உள்ளதால் இவரும் வெளியேற வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

எனினும், இதில் ஏதாவது புதிய ட்விஸ்டை கூட பிக்பாஸ் வைக்கலாம். என்ன நடக்கிறது... யார் வெளியேறுவார் என்பது இன்றைய தினம் தெரிய வரலாம். அதே போல் சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா... இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே இருப்பாரா... வெளியேறுவாரா என்பதும் இன்று தெரியவரும்.

click me!