
வெள்ளித்திரையை தாண்டி சின்னதிரை நட்சத்திரங்களுக்கும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் மிகவும் பிரபலமானது.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் அமித் பார்கவ் நடித்து வருகிறார். கதாநாயகியாக சரண்யாவும் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நிஷாவும் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த சீரியலில் இருந்து நிஷா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நிஷா. அதில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் நல்ல விதமாக இருந்ததாகவும் ஆனால் போக போக நெகட்டீவ் வேடமாக அதனை இயக்குனர் வடிவமைத்து வருகிறார்.
இது அந்த சீரியலுக்கு தேவையானது தான். ஆனால் எனக்கு இப்படி நடிப்பது சரிப்பட்டு வராது என்னால் இதுபோல் நடிக்க முடியாது என்பதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.