பிக்பாஸ் வீட்டு உள்ள வந்ததுமே சாக்ஷியை தலைகீழே நிக்க வச்ச கஸ்தூரி! பவரை யூஸ் பண்ணி பாட படுத்துறாங்களே!

By manimegalai aFirst Published Aug 8, 2019, 5:27 PM IST
Highlights

பிக்பாஸ் வீட்டிற்குள் போகவே மாட்டேன் என கூறிக்கொண்டிருந்த கஸ்தூரி, இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்துள்ளார். இவர் வீட்டிற்குள் திடீர் என வந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

முதல் ப்ரோமோவில், இவருடைய என்ட்ரி காட்சி காட்டப்பட்டது. இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, மீராவின் பெயரை இழுத்து, சேரனை கேலி செய்தார். மேலும் அனைத்து போட்டியாளர்களிடமும் அவர் மனதில் உள்ள கேள்விகளை இன்றைய தினம் கேட்பார் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரம் போட்டியாளர்கள் யாருக்கும் ஜெயில் தண்டனை இல்லை என்பதை அறிவிக்கிறார் கஸ்தூரி. ஆனால் புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் ஹவுஸ் மேட் , கஸ்தூரிக்கு புதிய பவர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் யாருக்கு குடை பிடிக்க சொல்கிறாரோ அவருக்கு குடை பிடிக்க விடும், அவர் சொல்லும் நபர் தோப்பு கரணம் போட வேண்டும் மற்றும் தலைகீழாக நிற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தர்ஷன் எங்கு சென்றாலும் அவருக்கு குடை பிடிக்க வேண்டும் என்கிற டாஸ்கை கொடுத்துள்ளார் கஸ்தூரி. இதை தொடர்ந்து ஷெரீனுக்கு, தோப்பு காரணமும், சாக்ஷியை தலை கீழாகவும் நிற்க வைத்து, முதல் நாளே தன்னுடைய பவரை யூஸ் பண்ணி பற்ற போட்டியாளர்களை பாடாய் படுத்தியுள்ளார் கஸ்தூரி.

click me!