காரில் கடத்தப்பட்டு  பாலியல் துன்புறுத்தல்..... கதறும் நடிகை பாவனா....

 
Published : Feb 18, 2017, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
காரில் கடத்தப்பட்டு  பாலியல் துன்புறுத்தல்..... கதறும் நடிகை பாவனா....

சுருக்கம்

கார்த்திகா மேனன் என்கிற தன்னுடைய பெயரை சினிமாவிற்காக பாவனா என மாற்றிக்கொண்டு, தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகம் கொடுத்தவர் நடிகை பாவனா.

இந்த படத்தை தொடர்ந்து பல தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது, இதை தொடர்ந்து அவர் நடித்த ஆர்யா, தீபாவளி, ஜெயம்கொண்டான் போன்ற படங்கள் அவருக்கு பல வாய்ப்புகளை தேடிக்கொடுத்து முன்னணி நாயகி பட்டியலில் இணைத்து.  மேலும் அவர் கடைசியாக  அஜித்துடன் அசல் படத்தில் நாயகியாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்த தொடங்கியதால், தமிழ் பட வாய்ப்புகள் அவரது கையை விட்டு விலகிவிட்டது.

இந்நிலையில் நடிகை பாவனா இன்று காலை அடையாளம் தெரியாத சில நபர்களால் சினிமா பாணியில்  காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து போலீஸில் நடிகை பாவனா புகார் அளித்துள்ளார். அதோடு அந்த கும்பலில் தன்னிடம் இதற்கு முன் வேலை பார்த்த கார் ஓட்டுனர் இருந்ததாக கூறியுள்ளார்.

இதை அறிந்த மலையாள திரையுலக வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளனராம், அதே போல அவரது நண்பர்கள் பிரபலங்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!