நடிகை பாவனா, அந்த துயர சம்பவத்தில் இருந்து மீண்டு தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி வருகிறார். இவர் தற்போது தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும். இவருக்கு கோலிவுட் ரசிகர்கள் பலர் உள்ளனர்.
மலையாளப் படங்களில் நடித்துள்ள இவருடைய திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இவருடைய நிச்சயத்திற்குப் பின் இவருடைய திருமண தேதி குறித்து தொடர்ந்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் நடிகை பாவனாவிற்கும், பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்துக்கு, பாவனா மற்றும் நவீனுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தற்போது திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திர ஜோடிகள் போல் ஆடம்பரமாக திருமணம் செய்துகொள்ள இருவரும் விரும்பாமல் எளிமையான உடையில் குறிப்பிட்ட நகைகள் மட்டுமே அணிந்து திருமணம் செய்துகொள்ள பாவனா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் திருமணத்திற்குப் பின் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பை தொடர்வேன் எனக் கூறியுள்ள பாவனா... திருமணத்திற்குப் பின்னரும் நடிப்பதற்கு தன்னுடைய கணவர் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை என கூறியுள்ளார்.