பைரவா , சிங்கம்-3 படத்துக்கு தடை கேட்டு வழக்கு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 
Published : Jan 10, 2017, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
பைரவா , சிங்கம்-3 படத்துக்கு தடை கேட்டு வழக்கு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சுருக்கம்

சினிமா கட்டணம் அதிகளவில் வசூலிப்பதை எதிர்த்து வழக்கு, பதிலளிக்க பைரவா , சிங்கம் 3 படத்தயாரிப்பாளர்களுக்கு  நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடித்து வெளியாகும் பைரவா, நடிகர் சூரியா நடித்து வெளியாகும் சிங்கம் ஆகிய படத்திற்கு திரையரங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேவராஜ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி டி. ராஜா,  தமிழக அரசுக்கும், பைரவா தயாரிப்பாளர், சிங்கம் 3 பட தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

வழக்குதாரர் தேவராஜ் ஏற்கனவே ரஜினி நடித்த கபாலி படத்துக்கும் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!