ஜல்லிக்கட்டு ‘மாடுபிடி’ வீரனாக களமிறங்கும் விஜய்சேதுபதி....!!!  

 
Published : Jan 10, 2017, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
ஜல்லிக்கட்டு ‘மாடுபிடி’ வீரனாக களமிறங்கும் விஜய்சேதுபதி....!!!  

சுருக்கம்

தமிழகம் முழுவதும் தங்களுடைய பாரம்பரியத்தை மீட்டேடுக்க தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீரவேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உறுதியுடன் உள்ளனர்.

ஒருசில நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன், சூர்யா, ஹிப்ஹாப் ஆதி, சிம்பு, ஜி.வி.பிரகாஷ், சிவகர்த்திகேயன் ஆகியோர் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் மாடுபிடிக்கும் வீரராக நடிக்கவுள்ளாராம். 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி 'கருப்பன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து.

இந்த படத்தில்தான் விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு குறித்த போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்சேதுபதி குறித்த இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!