பைரவா படத்தை திரையிட்டதால் இருவர் கைது...!!!

Asianet News Tamil  
Published : Jan 29, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பைரவா படத்தை திரையிட்டதால் இருவர் கைது...!!!

சுருக்கம்

இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ்  நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் பல திரையரங்கங்கள் வெறிச்சோடியது, ஆனால்  
குடியரசு தின விடுமுறை தினத்தில் பல திரையரங்குகளில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தை ஓமலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஒளிபரப்பப்பட்டதாக அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகர் ஒருவர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். 

இந்த தகவலை அடுத்து தாரமங்கலம் அருகே விஜய் ரசிகர்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதித்தனர். திருட்டு டிவிடிக்கு எதிராக ரசிகர்களே தற்போது களமிறங்கியுள்ளதால் மீண்டும் திரையுலகம் ததிருட்டு விசிடியில் இருந்து மேலும் என கூறப்படுகிறது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்