’ரஜினியைப் பற்றி நான் அப்படிச் சொல்லவே இல்லை’...பல்டி அடித்த டுபாக்கூர் ஜோதிடர் பாலாஜி ஹாசன்...

By Muthurama LingamFirst Published Jul 18, 2019, 4:05 PM IST
Highlights

உலகக்கோப்பை கிரிக்கெட் ரிசல்ட்டை ஓரளவு முன்கூட்டியே கணித்ததால் கடந்த ஒரு வாரகாலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவரும் பிரபல டுபாக்கூர் ஜோதிடர், ரஜினி ரசிகர்களின் தொல்லை தாங்காமல் தனது முகநூல் பக்கத்தில் சாஷ்டாங்கமாக மன்னிப்புக்கேட்டு ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அவரது பதிவு இதோ..
 

உலகக்கோப்பை கிரிக்கெட் ரிசல்ட்டை ஓரளவு முன்கூட்டியே கணித்ததால் கடந்த ஒரு வாரகாலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவரும் பிரபல டுபாக்கூர் ஜோதிடர், ரஜினி ரசிகர்களின் தொல்லை தாங்காமல் தனது முகநூல் பக்கத்தில் சாஷ்டாங்கமாக மன்னிப்புக்கேட்டு ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அவரது பதிவு இதோ..

நான் நிஜமாக 
சமூக ட்ரெண்டிங் காரணமாகத் தான் 
என்னைக் கேலி செய்கிறார்கள் என்று உண்மையில் இந்த நிமிடம் வரை நினைத்திருந்தேன் .சற்றுமுன் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகரும் எனது அண்ணனும் நெருங்கிய தொழிலதிபருமான இந்த நேரத்தில் பெயர் சொல்ல விரும்பவில்லை.அவர் கூறிய பிறகுதான் தெரிகிறது ரஜினி ரசிகர்கள் கோபமாக இருப்பதற்கு காரணம் வேறு என்று

உண்மையாக 
அவருடைய உடல் நலத்தில் ஒரு சிறு பின்னடைவு ஏற்பட்டு ஒரு சில நாட்கள் அவதிப்படுவார் 
அதற்கு பிறகு ஓய்வெடுப்பார். அப்புறம்தான் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்றே கூறினேனே 
தவிர வேறு அவருக்கு ஆபத்து கண்டம் என்று எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை

உண்மையிலேயே அவரது ஜாதகத்தில் அப்படி எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.இப்பொழுது தான் புரிகிறது ஏன் இந்த குழப்ப நிலை என்று. நிஜமாக அவருக்கு ஆயுள் கண்டம் என்பது இல்லை. இதுதான் உண்மை.மேலும் அவர் அரசியலில் தனியாக நின்றால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொன்னேன்.

தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை தொலைக்காட்சிப் பேட்டி ரெக்கார்ட் செய்து எப்படி அவர்கள் போடுவார்கள் என்று. உங்களுக்கு தெரியும் நிஜமாக 
ரேடியோவிலும் தொலைக்காட்சியில் நான் கொடுத்தது

 அவருடைய உடல்நிலை குறிப்பிட்ட காலம் பாதிக்கும் .அதாவது ஒரு பத்து நாள் 20 நாள் அவர் அவதிப்படுவார்.அதற்கு பிறகுதான் அவருடைய அரசியல் பிரவேசம் வேகமாக இருக்கும் என்று கூறினேன்.அதை மக்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் ..அதற்கு விளக்கமாக தான் தவிர வேறு ஒன்றும் நான் சொல்லியது தவறு என்று பின்வாங்கவில்லை

நான் சொன்னது தெளிவாக புரிந்து கொள்வதற்காகத்தான் இந்த பதிவே தவிர வேறொன்றும் கிடையாது.

இதை புரிந்து கொள்ளுங்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் திட்டினாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.நான் எந்த ஒரு கால்ப்புணர்ச்சியும் 
கொள்ளவில்லை.

பின்குறிப்பு :- 
============

என் தகப்பனார் சேலம் மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் எவ்வளவு பெரிய உறுப்பினர் என்று என் தகப்பனாரை தெரிந்தவர்களுக்கு தெரியும்.எங்கள் கடையே இதற்கு 
முன்னாடி அருணாச்சலம் மளிகை யாக தான் இருந்தது.

மேலும் டிவிட்டர் அக்கௌன்ட் எனக்கு இல்லை அதில் யாரோ ஒருவர் 
எனது புகை படத்தை வைத்து அதில் யார் அடுத்த முதலவர் என்று ஒரு வாக்கெடுப்பு ( Twitter Poll ) செய்து அதில் 
திரு ரஜினி அவர்களை கடைசி இடத்திற்கு வரும்படி செய்து உள்ளார்

அது நான் இல்லை தாராளமாக நீங்க அவர் 
( Fake Account ) மீது வழக்கு தொடுக்கலாம்
தவறாக புரிந்து கொண்ட 
அவரது ரசிகர்களுக்கு
இந்த குழப்பத்திற்கு ஒரு வகையில் நானும் காரணம் என்பதால் மனமார வருத்தமும் மன்னிப்பும் கேட்கிறேன்...

P.Balaji
Salem

click me!