
இயக்குநராக அவதாரம் எடுக்க இருக்கும் நடிகர் அரவிந்தசாமி தான் இயக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் ஆச்சரியப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அரவிந்தசாமி, தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு, நடிப்பில் பிசியாகி விட்டார் அரவிந்த்சாமி. ‘போகன்’ படத்தில் நடித்து மாறுபட்ட நடிப்பை வெளியிட்டு அசத்தினார்.
தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி, ‘நரகாசூரன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், படம் இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருக்கும் அரவிந்த்சாமி, அடுத்த ஆண்டு இறுதியில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘என்னிடம் இருந்து இப்படியொரு கதையா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு எனது முதல் படம் இருக்கும்‘ என்று உறுதியாகச் சொல்கிறார் அரவிந்த் சாமி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.