
25 ஆண்டுகளுக்குப் பின், நடிகர் அரவிந்த்சாமி நேரடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் இவரது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'தனி ஒருவன்' படத்திற்கு பின் செம்ம பிஸியான நடிகராக மாறிய அரவிந்த்சாமி தற்போது அரை டஜன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள, கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன், தலைவி, ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த் சாமி. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் குஞ்சகோ போபன்னுடன் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் டி.பி.ஃபெலினி இயக்கவுள்ளார். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
மும்பை, கோவா, என முழு படத்தையும் இந்தியாவிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.